articles

இமயமலையின் மேற்குப் பகுதிகளில் நடைபெற்றுவரும் உள்கட்டமைப்புத் திட்டங்களை மறுபரிசீலனை செய்திடுக!-ச.வீரமணி

உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தர காசி மாவட்டத்தில் சில்க்யாரா வில் கட்டப்பட்டுவந்த சுரங்கப் பாதை இடிந்து, உள்ளே சிக்கிக்கொண்டு 17 நாட்க ளாக மிகவும் அவதிக்குள்ளாகி இருந்த 41 புலம் பெயர் தொழிலாளர்களை உயிருடன் மீட்கும் முயற்சிகள் இறுதியாக வெற்றி பெற்றுள்ளது. பொது மற்றும் தனியார்துறையின் பல்வேறு நிறு வனங்களும், வெளிநாட்டு வல்லுநர்களும், ராணு வத்தைச் சேர்ந்த பொறியாளர்களும், இதர பகுதி தொழிலாளர்களும், நாட்டின் பல பகுதிகளிலி ருந்தும்  விமானப் படையினரால் தருவிக்கப்பட்ட பல்வேறு எந்திரங்கள் மூலம், சுரங்கப்பாதையில் 60 மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு மூடி யிருந்த குப்பைகள் அகற்றப்பட்டு, இறுதியாக அத் தொழிலாளர்களை உயிருடன் மீட்கும் பணி வெற்றி பெற்றிருக்கிறது.

மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஒவ்வொருவ ரும் பூர்வாங்க பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், அருகில் சிறப்பு வசதிகளுடன் இருக்கின்ற சின்யாலியூர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். சுரங்கப்பாதைக் குள் சிக்கிக் கொண்டிருந்த அனைத்துத் தொழிலா ளர்களுடனும் தொலைபேசி உரையாடல்கள் மூலமும் மற்றும் பிற தகவல் தொடர்புகள் மூலமும் அனைவரும் பாதிப்பில்லாமல் உடல் நலத் துடன் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தபோ திலும், அவர்களில் எவருக்கேனும் கடுமையான காயம் அல்லது நோய் ஏதேனும் ஏற்பட்டி ருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெச்சரிக்கை யாக மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அதே சமயத்தில், உத்தரகண்ட் முதலமைச்சர் உட்பட ஆட்சி அதிகாரத்தின் பல்வேறு நிலையில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்ட தொழிலா ளர்களை மீட்பதற்காகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக தொலைக்காட்சிகளிலும் அடிக்கடி கூறி வந்தார்கள்.

எனினும் இவ்வாறு சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டுவிட்ட சந்தோஷத்தின் விளைவு மற்றும் கொண்டாட்ட சூழ்நிலை காரண மாக, ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், மிகவும் பலவீனமான நிலையில் உள்ள இமயமலைப் பகுதியில் எல்லாம் நன்றாகவே இருக்கிறது என்றும் எனவே நடைபெற்றுவரும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு எடுத்துச் செல்லலாம் என்றும் நினைப்பதற்கு வழி வகுத்திடக் கூடாது. நடைபெற்ற சம்பவம், சுரங்கப்பாதையின் முன் முனையில் மட்டும் நடக்காமல் வேறெங்காவது நடந்திருந்தால், அது மிகப்பெரிய அளவில் துயரமாக சம்பவமாக மாறியிருந்திருக்கும்.

இந்தச் சுரங்கப்பாதையின் ஒரு பகுதியாக இருக்கும் 900 கிமீ நீளமுள்ள சார் தாம் நெடுஞ்சாலைத் திட்டத்தைக் கட்டுவதற்கு ஒப்புதல் அளித்து செயல்படுத்தும் போது, பல்வேறு ஏஜென்சிகளின் அதே ஒருங்கிணைந்த முயற்சி, பல்வேறு நிபுணர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, இது கட்டப்பட்டிருக்க வேண்டும் என்றே அனைவரும் விரும்பினார்கள். மீட்பு நட வடிக்கைகளின்போது, சுரங்கப்பாதை தளத்தின் தன்மையின் காரணமாக தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாக மீட்புப் பணியில்  ஈடுபட்ட பல்வேறு ஏஜன்சிகளின் தொழில்நுட்ப  நிபுணர்களும், தேசியப் பேரிடர் மேலாண்மை  ஆணையத்தின் நிபுணர்களும் தெரிவித்தி ருக்கிறார்கள். அவர்கள், சுற்றியுள்ள மலைகளின் தளர்வான தன்மை காரணமாக ராட்சத துளையிடும் இயந்திரம் செயல்படுத்தப்பட்டபோது, புதிய குப்பைகள் விழுந்துகொண்டே இருந்த தாகக் குறிப்பிட்டார்கள். சுரங்கப்பாதையின் மேல்புறத்திலிருந்து செங்குத்தாக துளையிட்ட தும், கனரக எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதும் புதி தாக நிலச்சரிவுகளைத் தூண்டக் கூடியவைகளா கும் என்றும் அவர்கள் தெரிவித்தார்கள். 

இத்தகைய காரணிகள் அனைத்துமே இந்தப் பகுதியில் சாலை விரிவாக்கப்பணிகள் தொடங்கியதிலிருந்தே, பல்வேறு வல்லுநர் களும், புவியியலாளர்களும், உள்ளூர் சமூகத்தி னரும் மக்கள் அமைப்புகளும் கூறிவந்த வைகளேயாகும்.  சாலை விரிவாக்கத்திற்காகவும், சரிவுகளை வெட்டுவதற்காகவும், பொருத்தமற்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி,  வெடி வைத்துத் தகர்த்திடும் செயல்களும், கீழே ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றில் குப்பைகளைக் கொட்டி வந்ததும் மிகவும் ஆபத்தானவை என்று அவர்கள் ஆரம்பத்திலிருந்தே கூறி வந்தனர்.

இந்தக் காரணிகள்தான், மேற்கு இமயமலை யில் சமீபத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வந்த பேரழிவுகளுக்குக் காரணங்களாகும்.

நெடுஞ்சாலைகளில் விபத்துக்களை ஏற் படுத்தும் விதத்தில் பல தொடர்ச்சியான நிலச் சரிவுகள், பேரழிவினை ஏற்படுத்தும் விதத்தில் ஏற்பட்ட வெள்ளம், தபோவன்-விஷ்ணுகர் நீர்  மின்சாரத் திட்டத்தின் மொத்த அழிவு, ஜோதிமத்  நகரத்தின் சரிவு, புனிதத்தலமான சார்தாம் செல்வ தற்காக ஏற்படுத்தப்பட்ட முக்கியமான நுழைவா யில் ஆகிய அனைத்தும் ஆட்சியாளர்களின் மோச மான திட்டமிடலையும், இமயமலைப் பகுதியில் புவியியல் மற்றும் புவி-தொழில்நுட்ப பாதிப்பு கள் குறித்த அக்கறையின்மையையும் வெளிப் படுத்துகின்றன. மலைப்பாதைகளின் சுமந்து செல்லும் திறன் (carrying capacity) குறித்த அடிப்படை அம்சங்களைப்பற்றிச் சிறிதும் கவ லைப்படாமல் இங்கே சாலைகள் அமைப்பதற் கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.  சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை விதிகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக 900 கிலோ மீட்டர் தூரம் உள்ள நெடுஞ்சாலைத் திட்டத்தை ஒன்றிய ஆட்சியாளர்கள் 53 சிறிய பகுதிகளாகப் பிரித்ததை யாரும் மறந்துவிட முடியாது. ‘தேசியப் பாதுகாப்பு’ என்ற துருப்புச்சீட்டைப் பயன்படுத்தி நெடுஞ்சாலையை விரிவுபடுத்துவதற்கான அனுமதியை வழங்குமாறு உச்சநீதிமன்றத்தைக் கட்டாயப்படுத்தினார்கள்.

இப்போது ஏற்பட்டுள்ள இந்த சோக நிகழ்ச்சி க்குப்பிறகாவது, இமயமலையின் மேற்குப் பகுதியில் உள்ள அனைத்து உள்கட்டமைப்பு திட்டங்களையும், புனிதத் தலங்களுக்குச் செல்வ தற்காக ஏற்படுத்தப்படும் மலைப் பாதைகளில் மக்களையும், வாகனங்களையும் சுமந்துசெல் லும் திறன் குறித்து விரிவானமுறையில் மறு பரிசீலனை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும். அனைத்துக் கட்டுமானப் பணிக ளுக்கும் பொருத்தமான தொழில்நுட்பக் குறியீடு கள் உருவாக்கப்பட வேண்டும். விதிமுறைகளுக்கு உட்பட்டு இவை கட்டப்படுகிறதா என்பதை வலு வானமுறையில் கண்காணித்திட வேண்டும். இவ் வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடில், இவர்க ளால் இந்தப் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் “வளர்ச்சி நடவடிக்கைகள்” காரணமாக, பேரழி வினையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.  

நவம்பர் 29, 2023, 
தமிழில்: ச.வீரமணி